தலைக்கேறிய கஞ்சா, மது போதை.. கற்கள், கட்டையால் பெண்களை குறிவைத்து தாக்குதல்.. வெளுத்தெடுத்த பொதுமக்கள்.!
Coimbatore Drug Audit Culprit attacks Public Police Investigation
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவரது வீட்டின் முன் கடந்த சனிக்கிழமையன்று, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் போதையில் அமர்ந்துள்ளார். அவரை விசாரித்தபோது கஞ்சா மற்றும் மதுபோதையில் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து காளிராஜ், போதை ஆசாமியிடம், தனது வீட்டின் முன்பு அமரக் கூடாது என்று தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கொடூரன் கையில் கல்லை எடுத்து காளிராஜ் மீது எறிந்துள்ளான். இதனால் பதறிப்போன காளிராஜ் வீட்டிற்குள் ஓடவே, எதிரே வந்த காளிராஜின் மனைவி கல்பனாவின் மண்டை உடைந்துள்ளது.
இதோடு விட்டுவிடாமல் அங்கே இருந்த கட்டையை அடுத்து போதை ஆசாமி தாக்குதல் நடாத்தியுள்ளான். இதன்பின்னர் பக்கத்து வீட்டிற்குள் சென்று தமிழ்மொழி என்பவரின் மனைவியை தாக்கியுள்ளான். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், போதை ஆசாமியை பிடித்து நையப்புடைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
பின்னர், இரு பெண்களையும் அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பொது மக்கள் அவனிடம் விசாரித்த போது, பதில் சொல்ல முடியாத அளவு போதையில் இருந்துள்ளான். மேலும், அவனின் சட்டைப்பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் போதை ஆசாமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Drug Audit Culprit attacks Public Police Investigation