கள்ளக்காதலியை கடத்தி சென்று, கணவனிடம் பணம் கேட்டு மிரட்டல்?.. கோவையில் அதிர்ச்சி..!
Coimbatore Culprit Kidnap Illegal Affair girl threatening Money police investigation 20 December 2020
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கோட்டை குமார். இவர் தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவன், இவனின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவர் சூலூரில் வசித்து வரும் வாடகை வீட்டின் உரிமையாளர் மனைவியை தன் வலையில் விழ வைத்துள்ளார்.
இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு மலரவே, இது குறித்த விஷயம் வீட்டின் உரிமையாளர் பிரபுவிற்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், கோட்டை குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கள்ளக்காதலியை கத்தி முனையில் கடத்தி சென்று இருக்கிறார்.
இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ள நிலையில், இது தொடர்பாக பிரபு அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பிரபுவின் மனைவியை கடத்தி சென்ற கோட்டை குமார், மனைவியை விடுவிக்க பணம் வேண்டும் என்றும் மிரட்டியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Culprit Kidnap Illegal Affair girl threatening Money police investigation 20 December 2020