கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி உயிரிழக்க, பழிக்கு பழி வாங்கிய கணவன்..! கோவையில் சம்பவம்.!!
Coimbatore Annur Affair Issue Man Murder Woman to Take Revenge 27 July 2021
கள்ளக்காதலால் பிரிந்து சென்ற மனைவி உயிரிழக்க, கள்ளக்காதலனின் மனைவியை ஆத்திரத்தில் கணவன் பழி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பச்சாபாளையம் பகுதியை சார்ந்தவர் முருகேசன் (வயது 47). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்தவர் வடிவேல் (வயது 40). இவரது மனைவி திலகவதி.
முருகேசனுக்கும் - திலகவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக இருவரும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி பகுதியில் வீடெடுத்து கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.
திலகவதி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உயிரிழக்கவே, முருகேசன் சொந்த ஊரான அன்னூருக்கு வந்திருக்கிறார். இதன்போது, முருகேசனுக்கும் - வடிவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று முருகேசனின் மனைவி பச்சாம்பாளையம் அருகே நடந்து வருகையில், அங்கிருந்த வடிவேல் திடீரென வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, ஆத்திரமடைந்த வடிவேல் முருகேசனின் மனைவியை தகாத வார்த்தையால் திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால் வலி தாங்க இயலாத முருகேசனின் மனைவி அலறவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக முருகேசன் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வடிவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Coimbatore Annur Affair Issue Man Murder Woman to Take Revenge 27 July 2021