சேலத்தில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

அந்த வகையில், இன்று மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் உள்ளிட்டோரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இதற்காக தர்மபுரியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் அங்கிருந்து கார் மூலமாக சேலத்திற்கு வந்தார். பின்னர் சேலத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைப்பயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin vote collect in salem market


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->