மக்களுடன் ஸ்டாலின் - செயலியை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


மக்களுடன் ஸ்டாலின் - செயலியை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.!

வேலூர் மாவட்டத்தில் நாளை தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

இதற்காக, வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடிக்கு வந்துள்ளார்.

அவருக்கு ரெயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார். இதைத்தொடர்ந்து அவர் நாளை மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேரூரை ஆற்றுகிறார். 

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை நடைபெறும் முப்பெரும் விழாவில் "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செயலியை வெளியிடுகிறார். இந்தச் செயலி முதலமைச்சரின் கள செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையிலும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM mk stalin tomarrow publish makkaludan stalin app in vellore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->