கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பித்த சிறுவர்கள் - தனிப்படை அமைத்து தேடும் போலீசார்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழபுலிவார்டு சாலையில் வி. என் நகரில் இயங்கி வரும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் இந்த கூர்நோக்கு இல்லத்தில் இருந்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாண்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷ் கார்த்திக் உள்ளிட்டோர் காப்பக வார்டன் தூங்கும் நேரத்தில் அவரிடம் இருந்து கேட்டின் சாவியை எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.

இதை அறிந்த கூர்நோக்கு இல்லத்தின் அலுவலர்கள் சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

childrens escape observation home in trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->