மனநலம் பாதித்த பக்தரை தாக்கிய தீட்சிதர்கள்.. சிதம்பரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக தீட்சிதர்கள் 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கார்வண்ணன் என்ற நபர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அதே நேரத்தில் சாமி வீதி உலா வந்துள்ளது. 

உலா வந்த சாமியின் முன்பாக கார்வண்ணன் எதிரில் வந்து நின்றுள்ளார். இதைப் பார்த்த தீட்சிதர்கள் 2 பேர் அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. அந்த தீட்சிதர்கள் நடத்திய தாக்குதலில் கார்வண்ணனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

காயமடைந்த கார்வண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் கார்வண்ணன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. எனவே அவரை தாக்கிய தீட்சிதர்கள் இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram thetsithar attack mentally disturbed person


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->