கனமழைக்கான அறிவிப்புடன், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Chennai Weather Report Announcement 21 September 2020
அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வானிலை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு. மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி அவலாஞ்சியில் 18 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மேல்பவானியில் 12 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 13 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 10 சென்டிமீட்டர் மழையும், கோவையில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தெற்கு வங்க கடல், மத்திய வங்கக் கடல், தென்மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Chennai Weather Report Announcement 21 September 2020