தனியா போற பொண்ணுங்கள பார்த்தாலே...., சைக்கோ காமுகன் பரபரப்பு வாக்குமூலம்.! சென்னையில் திகில்.!! - Seithipunal
Seithipunal


சாலையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை, சில்மிஷம் செய்து வந்த இளைஞன் கைது செய்யப்பட்டு இருக்கிறான். அவனின் வாக்குமூலம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் வடக்குத்தெரு, ஜெகநாத நகர் பகுதியை சார்ந்தவன் தினேஷ் குமார் (வயது 20). இவன் புதுடெல்லியில் உள்ள கல்லூரியில் உணவக நிர்வாக படிப்பு பயின்று வருகிறான். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இணையவழியில் வகுப்புகள் நடைபெற்று வந்துள்ளது. 

இந்நிலையில், எழும்பூரில் செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதியில் பணியாற்றிக்கொண்டே படித்து வந்த தினேஷுக்கு குமாருக்கு, பெண்கள் மீதான வினோத ஆசை ஏற்பட்டுள்ளது. இவனுக்கு சாலையில் பெண்கள் தனியாக நடந்து சென்றால், அவர்களின் அங்கத்தை தொட்டு பார்க்க வேண்டும் என்ற கேடுகெட்ட ஆசை இருந்துள்ளது. 

வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரை கண்ணில்படும் பெண்களை தினேஷ் குமார் சில்மிஷம் செய்து அட்டகாசத்தால் ஈடுபட்டு வந்துள்ளான். வில்லிவாக்கத்தில் இருந்து அதிகாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு செல்லும் தினேஷ், பெண்கள் தனியாக செல்வதை பார்த்தால் வாகனத்தை முதலிலேயே நிறுத்திவிடுவான். 

பின்னர், பெண்களிடம் எப்படி சில்மிஷம் செய்வது என திட்டமிட்டு, பெண்ணின் அருகில் சென்று சில்மிஷம் செய்து தப்பியோடிவிடுவான். வில்லிவாக்கம், அண்ணாநகர், கீழ்பாக்கம் மற்றும் எழும்பூர் பகுதிகளிலி தினேஷின் அட்டகாசம் தொடர்ந்து வந்துள்ளது. 

இதனைப்போல, மாலை நேரங்களில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போதும் அட்டகாசம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சைக்கோ போல பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறான். கடந்த 10 ஆம் தேதி அண்ணாநகர் பகுதியை சார்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர், தனது 2 மகள்களுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது, அவரின் 22 வயது இளைய மகள் முன்னால் தனியாக நடந்து சென்று கொண்டு இருந்த நிலையில், காமுகன் தினேஷ் குமார் பெண்மணி தனியாக நடந்து வருகிறார் என எண்ணி சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறான். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிடவே, தந்தை ஓடி சென்று இருக்கிறார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தினேஷ் குமார் அங்கிருந்து தப்பி செல்லவே, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர், உதவி ஆணையர் அகஸ்டின் மற்றும் காவல் ஆய்வாளர் ரஜிஸ் பாபு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

விசாரணையில், இளைஞர் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை, சில்மிஷம் போன்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வது அம்பலமாகவே, அவன் வந்து சென்ற வாகனத்தை வைத்து விசாரிக்கையில், உறவினர்களிடம் இருந்து தினேஷ் குமார் வாகனங்கள் வாங்கி வந்து பெண்களிடம் சில்மிஷம் செய்து சென்றது அம்பலமானது. 

இதனையடுத்து, எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றி வந்த தினேஷை  காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்யவே, விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டான். மேலும், காவல் துறையினரிடம் காமுகன் அளித்த வாக்குமூலத்தில், "தனியாக பெண்கள் நடந்து செல்வதை பார்த்தால், என்னை அறியாமலேயே எனக்கு அப்படியான எண்ணம் வந்துவிடுகிறது. 100 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோல தவறாக நடந்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளான்.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்கள் இதுபோல சாலைகளில் பாலியல் ரீதியான துன்புறுத்தலை சந்திக்க நேர்ந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பெண்களிடம் சில்மிஷம் செய்த புகாரில் சிக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Villivakkam Youngster Dhinesh Kumar Aged 20 Arrested by Police Sexual Torture to Woman 100 Nos


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->