என்னால படிக்க முடியல., சென்னையில் இருந்து மதுரை வந்து தற்கொலை செய்த பள்ளி மாணவி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், குலமங்களம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி சேலையில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சிறுமிக்குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் திவ்யதர்ஷினி (வயது 15) என்பது தெரிய வந்தது.

மேலும், மாணவி திவ்யதர்ஷினி எழுதிய 7 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த மாணவி பெற்றோர், தோழிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. என்னால் படிக்க முடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறினேன். திருச்சியில் உள்ள கோயில்களுக்கு 2 நாட்களாக ஆட்டோவில் சென்று வந்தேன். 

பின்னர் மதுரைக்கு வந்து விட்டேன். என்னால் படிக்க முடியவில்லை எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் மாணவி குறிப்பிட்டு உள்ளார்.

கடிதத்தின் அடிப்படையில் மாணவி திவ்யதர்சினி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வழக்கு பதிந்த போலீசார், மனைவி தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்குமா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai school girl suicide in madurai


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->