சென்னை : ஜூன் 11ஆம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் - தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


ஜூன் 11ஆம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னை வாசி பொதுமக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 10-ஆம் தேதி முதல் ரேஷன் கார்டில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும்.

ரேஷன் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களும் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் ஜூன் 11ம் தேதியை நினைவில் வைத்துக் கொண்டு தங்கள் குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Ration card special camp on June 11


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->