மனைவியின் மீது தீராத சந்தேகம்.. மகன் வேலைக்கு சென்றபோது அரங்கேறிய பெருங்கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி பகுதியை சார்ந்தவர் நூருதீன் (வயது 52). இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹசீனா பேகம் (வயது 42). இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

மகள் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வரும் நிலையில், கடந்த 19 ஆம் தேதி தம்பதியின் மகனான அல்தாபி பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது தாயாருக்கு அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்துள்ளார். 

இந்நிலையில், வீட்டில் தனது தாயார் கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.  இதனையடுத்து பூந்தமல்லி காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஹசீனா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், தலைமறைவாக இருந்த நூருதீனை கைது செய்தனர். இவர் அளித்த வாக்குமூலத்தில், " மனைவியின் நடத்தையில் கொண்ட சந்தேகத்தால் எழுந்த பிரச்சனையில், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது " தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Poonamallee wife Murder by Husband due to Doubts Police Investigation 1 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->