பிரபல பாலிடெக்னிக் நிறுவனர் மீது தாய் பரபரப்பு புகார்.. கொள்ளிபோட வேண்டாம் என ஆவேசம்..! - Seithipunal
Seithipunal


பொன்னேரி பகுதியில் இயங்கிவரும் குமரன் பாலிடெக்னிக் உரிமையாளர் மீதும், அவரது சகோதரரும் அவர்களின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னை மீஞ்சூர் விநாயகா ஐ.டி.ஐ மற்றும் குமரன் பாலிடெக்னிக் ஆகியவற்றின் உரிமையாளர்களான வாணிதாசன், உத்ராபதி சகோதரரின் தாய் பாக்கியம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

இந்த புகாரில், கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக தனது கணவர் கலியபெருமாள் இறந்துவிட்ட நிலையில், மகன்கள் இருவரும் மாதம் ஒரு சொற்பத் தொகையை வங்கி கணக்கில் செலுத்தி விடுவதோடு சரி. தன்னை நேரில் கூட வந்து பார்ப்பதில்லை. 

தனது ஒரே மகளும், அவரது கணவரும் தன்னை கவனித்துக் கொள்கின்றனர். என்னை வந்து பார்க்காத மகன்கள், எனது இறப்பில் கலந்துகொண்டு, எனக்கு கொள்ளி போட வேண்டாம். கணவன், மகன்கள், மகள் என்று கூட்டுக்குடும்பமாக வசித்து வருகையில், அனைவரின் உழைப்பிலும் பல சொத்துக்கள் வாங்கப்பட்டது. 

தற்போது, அவை அனைத்தையும் எனது இரண்டு மகன்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். குறைந்தபட்சம் எனது கணவரின் பெயரில் இருந்த சொத்துக்களையாவது எனது பெயருக்கு அவர்கள் தர வேண்டும். கண்பார்வை கோளாறு, காலில் அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் தவித்து வருகிறேன் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Minjur Kumaran Polytechnic Founder Mother Complaint 14 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->