காதல் தோல்வியால் விபரீதம்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள மாதவரம் பஜார் தெருவை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் நிர்மலா (வயது 19). இவர் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார். 

இவரது தாயார் செல்வி. செல்வி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சமையல் செய்பவராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் செல்வி பணிக்கு சென்று விட்ட நிலையில், நிர்மலா வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இந்நிலையில், நிர்மலா வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். பணி முடிந்து திரும்பியதும் வீட்டுக்குள் வந்த செல்வி, மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். 

இதனையடுத்து இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, மாதவரம் காவல் ஆய்வாளர் கோபிநாத் நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Madhavaram College girl Nirmala suicide due to Love Failure


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->