ஒழுங்கா சாலையை போட்டுவிட்டு, போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதியுங்கள் - உயநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. அதன்படி, போக்குவரத்து போலீசார் புதிய அபராதம் விதித்து வருகின்றனர். 

* மது போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் 10,000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். 
* ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
* செல் போன் சிக் கொண்டே பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.
* ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.
* அதி வேகமாக, அபாயகரமாக வாகனத்தை செலுத்தினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் 18 வயதிற்கு உட்பட்ட நபர் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், "அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC TN Traffic Police Fine Case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->