தமிழ்நாட்டில் "பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து".!! அண்ணா‌ பல்கலை. அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பொறியில் மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 6-ம் தேதி முதல் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மே 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

மக்களவை இப்போது தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. மக்களவைப் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகளில் வைக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அதேபோன்று சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறுகிறது. 

இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாக்குப்பெட்டி வைத்துள்ள அறை பக்கம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட சிசிடிவி கார் கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மே 15ஆம் தேதி முதல் நடைபெறும் என்பதை ரத்து செய்துவிட்டு ஜூன் 6-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University semester exam postponed


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->