சென்னை || மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து.! தீயில் கருகிய முக்கிய கோப்புகள்..!
chennai Electricity Board Office fire accident
சென்னையில் அண்ணாசாலை பகுதியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இன்று காலை 6 மணிக்கு இந்த அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர் .
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர்.
வீரர்களின் நீண்ட நேர முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த கொடூர தீ விபத்தால் அலுவலக கட்டிடத்தில் இருந்த பத்து கணினிகள் மற்றும் முக்கிய கோப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
chennai Electricity Board Office fire accident