படிக்கட்டில் பயணம்... மேலே ஏறி வர சொன்னதற்கு, கண்ணாடியை பதம் பார்த்த கல்லூரி புல்லிங்கோஸ்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வள்ளலார் நகரில் இருந்து, திருவேற்காடு நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்தில், 18 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 2 பேர், பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். 

இதனைக்கண்ட பேருந்து நடத்துனர் ஜான் போஸ்கொ, படிக்கட்டில் இருந்து மேலே ஏறி வரக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்குள்ளாக, பேருந்து மதுரவாயல் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளது. 

இதன்போது, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய இருவரும், பேருந்தின் முன்புற கண்ணாடியை கல்லால் உடைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக பேருந்து நடத்துனர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரையும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Bus Front Mirror Damaged by Two College Students Advice Form Conductor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->