#சென்னை | இசை கலைஞரை கடத்திய மர்ம கும்பல்! நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் ஆத்திரம்! - Seithipunal
Seithipunal


சென்னை, திருவேற்காடு அருகே இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரியில் கலந்துகொண்டு வீடு திரும்பிய தேவ் ஆனந்தின் காரை ஒரு மர்ம குமபல் வழி மறுத்துள்ளது.

காரின் இருந்த தேவ் ஆனந்தை அந்த கும்பல் அடித்து உதைத்து கடத்தி சென்றதாக அவரின் நண்பர்கள் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணையில், தேவ் ஆனந்தின் சகோதரர் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வந்ததாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களை அவர் ஏமாற்றியதும்ம் தெரியவந்துள்ளது.

இதில் சுமார் 3 கோடி ரூபாயை இழந்த ஒருவர் தான் தேவ் ஆனந்தை கடத்தி சென்றுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேவ் ஆனந்தை கடத்தி சென்ற அந்த மர்மகும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

அண்ணன் செய்த பணமோசடிக்காக தம்பியை கடத்திச்சென்ற சம்பவம் திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai brother Dev Anand kidnapped


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->