அசதியில் உறங்கிய தாய், தந்தை.. தவழ்ந்து குளியறைக்கு சென்ற பச்சிளம் பிஞ்சு மரணம்.. பெற்றோர்களே கவனம்.! - Seithipunal
Seithipunal


நீர் நிரம்பிய வாளியில் பச்சிளம் குழந்தை தலைகுப்பற கவிழ்ந்து பலியான சோகம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் உள்ள மண்ணடி சுப்புபிள்ளை பகுதியை சார்ந்தவர் குமரேசன் (வயது 24). இவர் சென்னை துறைமுகத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணி (வயது 21). இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய இனியாசி என்ற பெண் குழந்தை உள்ளது. 

நேற்று மாலை நேரத்தில் குமரேசன் பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் அசதியில் படுத்து உறங்கியுள்ளார். வீட்டில் குழந்தை இனியாசி விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், கலைவாணியும் உடல் அசதியால் அயர்ந்து உறங்கியுள்ளார். 

வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை குளியல் அறைக்குள் சென்று, நீர் நிரம்பிய வாளியில் தலைகுப்பற விழுந்துள்ளது. உறக்கத்தில் இருந்து திடீரென விழித்துக்கொண்ட கலைவாணி, குழந்தையை காணாமல் தேடியுள்ளார். 

பின்னர், குளியல் அறைக்குள் சென்று பார்த்தபோது குழந்தை வாளிக்குள் இருப்பதை கண்டு அலறியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த குமரேசன், குழந்தையை தூக்கிக்கொண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கணவனும் - மனைவியும் குழந்தையின் உடலை கட்டியணைத்து அழுத சோகம், அப்பகுதியில் காண்போரை கண்கலங்க செய்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Baby Died Bath Tub Police Investigation 15 March 2021


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->