டாஸ்மாக் ஊழியரின் முகத்தில் மார்க் போட்ட அரைபோதை புள்ளிங்கோஸ்..!
Chengalpattu Injambakkam Tasmac Sales Man Murder Attempt By Rupture Gang Police Investigation
மதுபான விற்பனையாளருக்கு முகத்தில் கத்திக்குத்து விழுந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கம் அருகே மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கடைக்கு இன்று வந்த கும்பலொன்று, தங்களுக்கு தேவையான மதுபானங்களை கேட்டு வாங்கியுள்ளது. இதற்கான பணத்தை கும்பலிடம் விற்பனையாளர் கோபி என்பவர் கேட்கையில், பணத்தை தர முடியாது என கும்பல் வாக்குவாதம் செய்துள்ளது.
இதனையடுத்து, வாங்கிய மதுபானத்தை தந்து செல்ல கூறி கோபி அறிவுறுத்தவே, இருதரப்பிடையே தகராறு எழுந்துள்ளது. ஏற்கனவே மதுபானம் அருந்தி அரை போதையில் இருந்த கும்பலானது, கத்தியை காண்பித்து மிரட்டியுள்ளது.
இதற்கு பயம் கொள்ளாத கோபி பணம் கேட்கவே, ஆத்திரமடைந்த கும்பல் கோபியின் முகத்தில் கத்தியால் குத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட கோபி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 ஆம் தேதி ஒரகடம் பகுதியில் உள்ள மதுபான கடையில், விற்பனையாளர் துளசிதாஸ் கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மற்றொரு கடையில் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chengalpattu Injambakkam Tasmac Sales Man Murder Attempt By Rupture Gang Police Investigation