சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம்.! இளைஞரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள்.!
Cellphone flush by mysterious person in saidapet
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்றுள்ளனர் மர்ம நபர்கள்.
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சொடலா அசோக். இவர் நண்பரை சந்திப்பதற்காக பெண் தோழியுடன் புறநகர் ரயிலில் சென்னை சைதாப்பேட்டைக்கு சென்றுள்ளார்.
அப்போது ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி நடை பாதையில் சென்று கொண்டிருக்கும்போது பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.
சொடலா அசோக் செல்போனை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு செல்போனை பரித்து சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.
English Summary
Cellphone flush by mysterious person in saidapet