அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - மருத்துவர் மீது வழக்கு பதிவு.!   - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பத்தொன்பது வயது நர்சிங் மாணவி ஒருவர் செவிலியர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இந்த நர்சிங் மாணவியிடம் எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்த எஸ்.பாபு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சத்தம்போட்ட படி, அறையில் இருந்து வெளியே ஓடி வந்து மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் சக நர்சிங் மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசில், புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையை தொடர்ந்து போலீசார் மருத்துவர் பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file government hospital doctor for harassment in kudiyaththam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->