மதுரை || இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலக்கால் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன் (48). இவர் மருத்துவமனையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முத்துராமன் தனது நண்பரான வேல்முருகனுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை-மேலக்கால் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து முத்துராமனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முத்துராமன் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car twowheeler collided in madurai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->