செங்கல்பட்டு.! கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் தேசுமுகிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் டிரைவர். இவர் சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கீர்ப்பாக்கம் பகுதியில் எதிர்பாராதவிதமாக கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car lorry accident in Chengalpattu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->