திருமணமான பெண் என்றும் பாராமல் கார் டிரைவர் செய்த காரியம்!! பகீர் கிளப்பும் சம்பவம்!!
car driver arrested for abused married women
கோவை மாவட்டத்தில் உள்ள உப்பிலியாப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கார் ஓட்டுநரான ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கார் ஓட்டுநர் ராஜாவின் அருகில் நின்று சில புகைப்படங்களை அந்த பெண் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார் ஓட்டுநர் ராஜா, அந்த பெண்ணிடம் அவரது கணவரை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ராஜா தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
English Summary
car driver arrested for abused married women