சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதல் - பெண் பலி, 3 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மனைவி ராஜபிரியா(38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை இவர்கள் நான்கு பேரும் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது மதுராந்தகம் அருகே சென்ற போது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் திடீரென மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா பிரியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த வசந்தகுமார் மற்றும் அவரது மகள், மகன் ஆகிய மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car collided with a lorry in Chengalpattu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->