சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய பேருந்து!!
Bus topples in roadside ditch
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து காஞ்சீபுரத்திற்கு எல்.எண்டத்தூர், உத்திரமேரூர் வழியாக பஸ் சென்றது. அந்த பஸ் தண்டலம் அருகே சென்ற போது மாடு திடீரென குறுக்கே வந்தது. அப்போது டிரைவர் பிரேக் அடித்தார்ம் அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தது மேல்மருவத்தூர், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த சம்பவ இடத்துக்கு வந்த மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
English Summary
Bus topples in roadside ditch