திருவள்ளூரில் பரபரப்பு..! இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி 50 இடங்களில் பிளேடால் வெட்டிய கொடூரம்..! போலீசார் விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி 50 இடங்களில் பிளேடால் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் 3-வது நடை மேடை பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் உடல் முழுவதும் பிளேடால் அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் அவரது முகம், கை, கால் என 50 இடங்களில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடனடியாக இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் பெண் அண்ணனுறை பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவர் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருவள்ளூர் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணுடன் வந்த வாலிபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brutality of stripping the young girl naked and cutting her with a blade in 50 places of body in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->