சடலமாக மீட்கப்பட்ட அண்ணன் தம்பி..விசாரணையில் வெளிந்த அதிர்ச்சி சம்பவம்..!
Brothers Murdered Near dindigul
கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த அண்ணன் தம்பியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது தம்பி சபரீஸனுடன் (13) கடந்த ஒன்றாம் தேதி வெங்காயம் விற்க சென்றார். இருவரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில்காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கொண்டாநகரம் டாஸ்மார்க் பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் மணிகண்டனின் சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர். சிறுவன் சபரீஸ்வரினின் உடல் பாகங்கள் கணெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமார், பார்த்திபன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டன் கடனாக வாங்கிய 20ரூபாயை திரும்பதராததாலும், கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Brothers Murdered Near dindigul