மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்.! தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மது குடிக்க பணம் கொடுக்காததால் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் முருகவேல்(26). இவரது அண்ணன் ஆட்டோ ஓட்டுநர் வைரமுத்து (36). இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வைரமுத்து மது பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி தாய் மற்றும் முருகவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வைரமுத்து பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த வைரமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து காயமடைந்த முருகவேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருத்தங்கல் போலீசார் வைரமுத்துவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother arrested for stabbing younger brother in virudhunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->