ஓபிஎஸ்-க்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விட்டு தரத் தயார்! ஆனால் ஒரு கண்டிஷன்!
BP undhayakumar challenged to OPS
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் உதயகுமார் பேசியதாவது "காவல்துறை மானிய கோரிக்கையின் போது நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி கேள்வி கேட்டார் அதற்கு முதல்வரால் பதில் அளிக்க முடியவில்லை.
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பன்னீர்செல்வத்தை நீக்கக்கோரி அளித்த கடிதத்தின் மீது சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடித்து வருகிறார்.
திமுக எனும் தீய சக்தியை எதிர்த்து உருவானது தான் அதிமுக. தற்பொழுது எதிர் கட்சி துணைத் தலைவர் போட்டி நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சவால் விடுகிறேன். தமிழக சட்டப்பேரவையில் ஒரே ஒரு நாள் "தீய சக்தி கருணாநிதி" என ஒரு முறை பன்னீர்செல்வம் கூறினால் அவருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விட்டுத்தர ஒத்துக் கொள்கிறோம். இந்த சவாலை ஏற்று சட்டப்பேரவையில் பன்னீர் செல்வம் பேசுவாரா? கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
BP undhayakumar challenged to OPS