டி.வி. பார்ப்பதில் அக்கா தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறு!! சகோதரன் எடுத்த விபரீத முடிவு!!
borther suicide for tv problem
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ராபர்ட் வில்லியம். இவருடைய மகன் சில்வன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டில் இருந்த சில்வன் மற்றும் அவனது சகோதரி இருவரும் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது டி.வி.யில் பிடித்தமான சேனல் வைப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சில்வன், டி.வி. ரிமோட்டை தூக்கி வீசி உடைத்து விட்டு கோபமாக வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார். ஆனால் சில்வன் தனது நண்பர்களை சந்திக்க தான் வெளியே செல்கின்றான் என வீட்டில் உள்ளவர்கள் நினைத்துள்ளனர்.
ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் அவனது பெற்றோர், சந்தேகத்தின்பேரில் வீட்டின் மாடியில் உள்ள சில்வனின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
சில்வனின் பெற்றோர் நீண்டநேரம் கதவை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சில்வன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
borther suicide for tv problem