நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த படகு - ராமேஸ்வரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அருகே பாம்பன் தென்கடல் பகுதியில் காலின்ஸ் என்பவருக்கு சொந்தமான படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த படகில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் படகு முழுவதும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாகவே படகில் தீ பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boat fire accident at midnight in rameshwaram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->