ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் நம்மைக்கண்டு பயம் கொள்கிறது... பாஜக நிர்வாகிகள் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது கன்னியாகுமரி நகரில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அம்மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில், புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தல், கன்னியாகுமரி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாருக்கு இரங்கல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் நிர்வாகிகள் பேசுகையில், " நமக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை நல்ல மாநில தலைவரை தந்துள்ளது. அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரின் வழியில் நாமும் சிறப்புடன் செயல்படுவோம். 

மக்களுக்கு அரசின் திட்டங்களை நமது உறுப்பினர்கள் எடுத்து கூறி, அரசின் பல நலத்திட்டங்களில் மக்கள் சேர உதவி செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினை பார்த்தால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் பயம் கொள்கிறது. இந்த பயம் தான் நமது வெற்றி. நாம் சிறப்புடன் செயல்படுகிறோம் என்பதை இது உணர்த்துகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் உள்ள அனைத்து பூத் பகுதியிலும் மக்களுக்கான பொது சேவையினை கட்சியின் நிர்வாகிகள் செய்ய வேண்டும். எல்.முருகன் தலைமையில் நாம் சிறப்புடன் செயல்பட்டு, வரும் தேர்தலில் அபார வெற்றியினை பெற வேண்டும். 

மத்திய அமைச்சராக பொன்.இராதாகிருஷ்ணன் பதவியேற்று இருக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இப்போது அந்த திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் இருக்கிறது. அதனையும் அரசு நிறைவேற்ற வேண்டும் " என்று பேசினார்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Party Meeting at Kanyakumari Administrators Speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->