சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து.!!

இன்று டெல்லியில் நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டன. அதில், தமிழில் 'ஆதனின் பொம்மை' என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,  'திருக்கார்த்தியல்' என்கிற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறும் இரண்டு எழுத்தாளர்களுக்கும் அரசியல் கட்சியினர், பேராசிரியர்கள் ௭ன்று அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாகத்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, 

"தமிழ் எழுத்தாளர்கள் இருவர், இந்திய இலக்கிய உலகின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி இந்த நாளைச் சிறப்பாக்கி உள்ளது.

‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக, சிறந்த குழந்தை இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய பால புரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் திரு உதயசங்கர் அவர்களுக்கும்;

வாழ்வியலைப் பேசும் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியுள்ள எழுத்தாளர் திரு ராம் தங்கம் அவர்களுக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றது தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leader annamalai wishes to sakithya academy award winners


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->