பத்திரிகையாளர்களை சீண்டிய அண்ணாமலை: நாள் குறித்த சங்கத்தினர்!
BJP Annamalai scolded journalists
பத்திரிகையாளர்களை கீழ்தரமாக பேசி வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து நாளை மாலை 4 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்க தலைவர் மு.அசீப் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
என். ராம் தி இந்து குழுமம், ஏ.எஸ் பன்னீர்செல்வம் மூத்த பத்திரிகையாளர், ஆர்.கோபால் நக்கீரன் ஆசிரியர், புதிய தலைமுறை எஸ்.சீனிவாசன், புன்னகை ஆசிரியர் திருஞானம்.
சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர் மு. குணசேகரன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், சத்தியம் தொலைக்காட்சி அரவிந்த் தாசன், நியூஸ் 7 தமிழ் ஆசிரியர் தியாகச் செம்மல், சென்னை பத்திரிகையாளர் சங்கம் மணிமாறன், சங்கர், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சகாயராஜ், தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரபு தாசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்ற உள்ளனர்.
English Summary
BJP Annamalai scolded journalists