போஸ்டர் ஒட்டுவதில் தகராறு.. திமுக - பாஜக மீண்டும் மோதல்... காவல்துறையினர் குவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாஜக மற்றும் திமுகவினரிடையே சுவரில் விளம்பரம் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையடுத்து, பதற்றம் காரணமாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.வி நகர் பகுதியில் கூட்டுறவு பண்டகசாலை இருக்கிறது. இந்த கட்டிடத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்த விளம்பரத்தின் மீது நேற்று திமுகவினர் பேனர் ஒட்டியுள்ளனர். 

இதனைக்கண்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி தமிழ்வாணன் பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாகி, அதனை அகற்ற முயற்சி செய்துள்ளார். இதனால் திமுகவினருக்கும் - பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாற சென்றுள்ளது. 

இதற்குள்ளாகவே திடீரென பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி தமிழ்வாணன் மயங்கி விழுந்ததை அடுத்து, அவரை மீட்டு திண்டுக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை வேடிக்கை பார்த்த பொதுமக்கள், விபரீதத்தை புரிந்துகொண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலையில், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல உத்தரவிட்டார். சுவரொட்டி மற்றும் பேனர் வைப்பதே தவறு என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பேனர் வைத்து பஞ்சாயத்துகள் நடைபெற்று வருவது மனவேதனையை அளிப்பதாக உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP and DMK Party Fight in Dindigul RV Nagar due to Poster Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->