டிராக்டர் மீது பைக் மோதி விபத்து - முதியவர் பலி.!
Bike tractor accident in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி(71). இவர் நேற்று காலை வெள்ளகோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது செம்மாண்டம் பாளையமேடு பகுதியில் சென்றபோது, முன்னாள் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக கந்தசாமி பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Bike tractor accident in Tiruppur