ஊட்டிக்கு சுற்றலா வந்த பெங்களூர் பெண் சடலமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பெங்களூரைச் சேர்ந்த IT கம்பெனியில் வேலை பார்த்து வரும் 10 நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர். 

மேலும், உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு தனியார் விடுதியில் தங்கினர்.

இந்த நிலையில், நேற்று மாலை கல்லட்டி ஆற்றிற்கு சென்றுள்ளனர். அப்போது குட்ட வினிதா சௌத்ரி என்பவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். உடன் வந்தவர்கள் காவல்துரையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அவர்கள் உடனடியாக மாநில பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.  பேரிடர் மீட்பு குழுவினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வினிதா சௌத்ரியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், இறந்த நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் உடலை மீட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bangalore lady death in ooty


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->