#அதிர்ச்சி : திருமுல்லைவாயல் போலீஸ் குடியிருப்பில் கூரை பெயர்ந்து விழுந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடியில் காவலர் குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டின் படுக்கையறை மேற்கூரை திடீரென பெயர்த்துக்கொண்டு விழுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் 900 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. இந்த குடியிருப்புகளில் போலீஸ்காரர்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். 

எத்தகைய நிலையில் இந்த குடியிருப்பின் ஐந்தாவது மாடியில், அம்பத்தூர் தொழில்பேட்டை போலீஸ் பாக்கியலட்சுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பாக்கியலட்சுமி வேலைக்கு சென்ற நிலையில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் வீட்டின் ஹாலில் இருந்தனர்.

அப்போது படுக்கையறை மேற்கூரை முழுவதும் பெயர்ந்து அங்கிருந்த கட்டிலின் மீது விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் யாரும் இல்லாததால் எந்தவித சேதமும் இல்லாமல் உயிர் பிழைத்தார்கள். 

காவலர் குடியிருப்பு புதிதாக கட்டப்பட்ட நிலையில் இதற்கு பாக்கியலட்சுமி குடும்பத்தினர் வந்து 6 மாதங்கள் தான் ஆகின்றன. இந்த சம்பவமானது அங்கே வசித்து வரும் நபர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avadi Police quarters accident 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->