ஆட்டோ மீது லாரி மோதி விபத்து.! ஓட்டுனர் பலி.! - Seithipunal
Seithipunal


ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் முத்து(60). இவர் தனது ஆட்டோவில் அண்ணா நகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி திடீரென ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் முத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் போலீசார் உயிரிழந்த முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Auto lorry accident


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->