பொறாமையால் பறிபோன உயிர்.. சொந்த அத்தையால் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.!
Athai killed 7 years old boy in Covai
கோவையில் 7 வயது சிறுவனை சொந்த அத்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி நிஷா மற்றும் 7 வயது மகனுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாகீர் உசேனின் அக்கா வேலைக்கு அழைத்து வந்துள்ளார். இதில் வேலைக்கு வந்த சில நாட்களில் ஜாகிர் உசேனுக்கும் அவரது அக்காவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இருவரும் ஒரே ஆலையில் வேலை செய்து வந்த நிலையில், ஜாகிர் உசேன் மீது அவரது அக்கா கடும் பொறாமை கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஜாகிர் உசேன் மற்றும் அவரது மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் மகன் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளான்.
இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கழுத்தில் காயங்களுடன் மயங்கிய நிலையில் சிறுவன் உயிரிழந்து கிடந்தான். இதனையடுத்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜாகிர் உசேனின் அக்கா சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Athai killed 7 years old boy in Covai