சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.. முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!
As stated fulfill the promise Farmers association urges the Chief Minister
தமிழக முதல்வர் குறைவு தொகையை சேர்த்து நெல் குவிண்டால் ரூபாய் 3,000 விலையாக அறிவித்திட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;தமிழக முதல்வர்,நேற்று முன்தினம் மேட்டூர் அணையை திறந்து வைத்தபின்பு சேலத்தில் நடந்த அரசு விழாவில் பேசும்போது நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ஊக்கத் தொகை ரூ 156 சேர்த்து ரூ. 2545. ஆகவும்,சாதாரண ரகத்திற்கு ஊக்கத் தொகை ரூ 131 சேர்த்து ரூ.2500 ஆகவும் விலை கொடுக்கப்படும் என கூறியது விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றமாகும்.
2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிபொறுப்பேற்றவுடன். நெல் விலை ரூ 2500 ஆக உயர்த்தி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி இதை நிறைவேற்றாமல் 5வது ஆண்டில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டு முதல்....ஒன்றிய அரசு இதுவரை கொடுத்திருக்கிற மூன்று ஆண்டுகளின் விலை உயர்வு முதல் ரகத்திற்கு 349 ரூபாய் இரண்டாவது ரகத்திற்கு 329 ரூபாய் ஆகும்.தமிழ்நாடு அரசு கொடுத்திருப்பதோ முதல் ரகத்திற்கு ரூபாய் 493. இரண்டாவது ரகத்திற்கு ரூபாய் 397 ஆகும் என குறிப்பிட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வாக்குறுதி படி அப்போதே ரூ.2500 கொடுத்திருந்தால்... மேற்கண்ட ஒன்றிய அரசின் மூன்றாண்டு விலை உயர்வையும் சேர்த்து.முதல் ரகத்திற்கு 2,849 ரூபாய்.. இரண்டாவதுரகத்திற்கு 2,829 ரூபாய் இப்போது கிடைத்திருக்கும். ஆகவே இது விவசாயிகளுக்கு ஏற்பட்ட கூடுதல் இழப்பாகும். ஆக மூன்று ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு சராசரி ஒரு குவிண்டாலுக்கு 3,239 ரூபாய். திமுக ஆட்சியின் வாக்குறுதி மீறலால் விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பாகும்.
கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்திக்கான செலவு உயர்ந்த வரும் நிலையில் சி2+50 %படி ஒன்றிய அரசு உரியவிலையை மட்டுமல்ல... லாபகரமான விலையாக ஒன்றிய அரசு அறிவிக்காது அடம்பிடித்து வரும் நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
இடுபொருள் உள்ளிட்ட முதலீட்டு செலவுகள் உயர்ந்து வரும் நிலையில் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. சத்தீஸ்கர் மாநிலம் தொடர்ந்து இப்படியான விலை உயர்வை கொடுத்து வரும் சூழலில் நடப்பாண்டு ஒரு குவிண்டால் ரூபாய் 3,120 கொடுத்து வருகிறது. ஆகவே தமிழக முதல்வர் குறைவு தொகையை சேர்த்து நெல் குவிண்டால் ரூபாய் 3,000 விலையாக அறிவித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்."இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
As stated fulfill the promise Farmers association urges the Chief Minister