#Breaking : சீரியல் நடிகர் அர்ணவ் நேரில் ஆஜர்.. திருமண விவகார பிரச்சனையில் அதிரடி திருப்பம்.!  - Seithipunal
Seithipunal


மகராசி சீரியல் நடிகை திவ்யா, தன் காதல் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நைனா முகமத். இவர் தமிழ் சீரியல் சேனல்களில் நடிகராக நடித்து வருகிறார். இதேபோல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் நடிகை திவ்யா, சென்னை புரசைவாக்கத்தில் மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

கேளடி கண்மணி என்ற சீரியல் தொடரில் நடிக்கும் போது நைனா முகமதுவுடன் நடிகை திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, காதல் ஆகி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில், இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டு, இந்த திருமணத்தை பதிவும் செய்துள்ளனர். நடிகை திவ்யா சேமிப்பதில் வெளியிட்ட வீடியோவில் கணவன் தன்னை அடித்து சித்திரவதை செய்து வருவதாகவும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகர் அர்னவ், விசாரணைக்காக போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். 

அப்போது அவர், "கருவை கலைப்பதற்காக திவ்யா நாடகம் ஆடுகிறார் என்றும், திவ்யா தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் இப்படி புகார் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arnav about divya video in 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->