2 சிறுமிகள் அடுத்தடுத்து திருமணம்.. செந்துறை இளைஞர் கைது.. நாடகக்காதல் வலைவீசி அட்டகாசம்.! - Seithipunal
Seithipunal


சிறுமியை திருமணம் செய்து சிறை சென்ற காமுகன், ஜாமினில் வெளியே வந்து வேறொரு சிறுமியை நாடககாதலில் விழ வைத்து திருமணம் செய்துள்ளான்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகேயிருக்கும் கிராமத்தை சார்ந்தவன் அஜித் குமார் (வயது 25). இவன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். இந்நிலையில், இந்த காமுகன் கடந்த ஜனவரி மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து செந்துறை அருகே உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமியை நாடக காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். 

பின்னர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்திடவே, இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து காமுகன் அஜித் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நீதிமன்றத்திற்கு சென்று ஜாமின் பெற்று வெளியே வந்த அஜித் குமார், மீண்டும் மற்றொரு சிறுமியை நாடக காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறான். பின்னர் அவரையும் திருமணம் செய்த நிலையில், இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல் துறையினர் காமுகன் அஜித் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பதின்ம வயதில் சிறுமிகள் காதல் வலையில் விழுந்து, அவனது வார்த்தையை நம்பி திருமணம் செய்தால் என்ன மாதிரியான விபரீதத்தை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் உதாரணம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Sendurai Culprit Attend 2 Child Marriage Using Drama Love Trap


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->