பொள்ளாச்சியில் அடுத்த சம்பவம்.? அதிர்ச்சியில் பொள்ளாச்சி மக்கள்.!! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி காளியாபுரம் நரிக்கால்புறம்   பகுதியைச் சேர்ந்த பாலன் - தேவி தம்பதிக்கு கடந்த ஏப்ரல்  29 ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்  ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில், பாலன் தேவி தம்பதி பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை தந்தனர் அதில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த தங்களின் ஆண் குழந்தையை காணவில்லை தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொள்ளாச்சி போலீசார், குழந்தையை கடத்திய பெண் குறித்து மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்ததில் குழந்தை கடத்திய பெண்ணை  அடையாளம் கண்டனர் இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்ய போலீஸ் திவீரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல்லை தொடர்ந்து தற்போது பொள்ளாச்சி குழந்தை கடத்தல் சம்பவம் தமிழக்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

another one pollachi issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->