பையில் கஞ்சா கடத்திய ஆந்திரா பெண் - மதுரை போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பையில் கஞ்சா கடத்திய ஆந்திரா பெண் - மதுரை போலீசார் அதிரடி.!

மதுரை மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு  பின்புறம் உள்ள மீன் மார்கெட் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது கையில் கட்டைப்பையுடன் சந்தேகத்திற்கிடமான நிலையில் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் போலீசார் அவரிடம் இருந்த பையினை சோதனையிட்டதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

அதில், அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராயபுரம் இந்தூர் காலணியை சேர்ந்த பத்ம சபலக்கா பத்மஸ்ரீ என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira woman arrested for drugs kidnape in madurai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->