கணவர் பிறந்த நாள் மனைவியின் இறந்த நாளாக மாறிய அசம்பாவிதம்.! கொண்டாடிய நேரத்தில், திண்டாட வைத்த சோகம்.!
An mother died in fathers birthday party
சென்னை அண்ணா நகரில், என்.பிளாக் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (90) - மணிமேகலை(80) தம்பதிக்கு அனந்த பத்மநாபன் என்ற மகனும், சித்ரா, புவனேஸ்வரி என்ற மகள்களும் இருக்கின்றனர்.
கடந்த 13 ம் தேதி பார்த்தசாரதிக்கு 90வது பிறந்த நாள் வந்துள்ளது. எனவே, அதனை சிறப்பாக கொண்டாட அவர்களது மகன் மற்றும் மகள்கள் திட்டமிட்டனர். இந்த விழாவில், பேரன், பேத்தி என்று அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
பிறந்த நாள் விழா நடந்து முடிந்ததும், மணிமேகலை சமயல் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ந்த குடும்பத்தினர் மணிமேகலையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மணிமேகலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
An mother died in fathers birthday party