#BEREAKING:: சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல்..!! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் கினியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பவுடர் பறிமுதல்..!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவிலிருந்து எத்தோப்பியா வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்பொழுது கினியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் சுற்றுலாவுக்கு வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் அவர் கொண்டு வந்த சூட்கேஸ் வழக்கமான எடையை விட கூடுதலாக இருந்ததால் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் சூட்கேஸை பிரித்துப் பார்த்தனர்.

அப்பொழுது சூட்கேஸின் ரகசிய அறையில் ஆம்பிட்டமின் என்ற போதை பொருள் இருந்தது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 1.539 கிலோ கிராம் எடையுள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து கினியா நாட்டு இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக எத்தியோப்பியா வழியாக சென்னை வரும் விமான நிலையங்களில் போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கினியா நாட்டு இளைஞரிடம் கடத்தல் கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amphetamine powder worth Rs3 crore seized at Chennai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->